உலகம் முழுவதும் நபிகள் நாயகத்தின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது!

Date:

நபி நாயகம் அவர்களின் பிறந்த தினம் இன்று (09) கொண்டாடப்படுகின்றது.

இது தொடர்பாக அகில இலங்கை இஸ்லாமிய சமய அறிஞர்கள் பேரவை  அறிக்கை வெளியிட்டுள்ளது,

மீலாதுன் நபி தினம் என அழைக்கப்படும் இந்நாள், உலகளாவிய ரீதியில் மகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தக்கூடிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், இன்றைய சமூகத்தின் நிலைமையைத் தணிப்பதற்கு நபிநாயகத்தின் தொலைநோக்குப் பார்வை மற்ற காலங்களை விடவும் பெரிதும் உதவியாக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒருவரையொருவர் அந்நியப்படுத்த முயல்வதை விடுத்து ஒருவரையொருவர் புரிந்து கொண்டு செயற்படுவதற்கு நபிகள் நாயகத்தின் தத்துவத்தை உள்வாங்குவது தமக்கு செய்யும் அஞ்சலி என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் நாட்டில் மீலாதுன் நபி தின தேசிய வைபவம் பேருவளை ஜாமியா நளீமியா மண்டபத்தில் இன்று நடைபெற்றது. பௌத்த மத அலுவல்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சும் முஸ்லிம் சமய அலுவல்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சும் இணைந்து இதனை அறிவித்துள்ளன.

இதேவேளை மீலாதுன் நபி தினம் இந்தியாவிலும் ஏனைய நாடுகளிலும் கொண்டாடப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை நபிகள் நாயகம் அவர்கள் அவதரித்த மீலாத் தினத்தையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டக்களப்பு காத்தான்குடி மன்பஉல் ஹைறாத் ஜும்ஆப் பள்ளிவாயலில் நபியவர்களின் புகழ்கூறும் மௌலூத் வைபவம் மற்றும் அண்ணதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வை காத்தான்குடி அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் நம்பிக்கை பொறுப்பு நிறுவனத்தின் தலைவர் மௌலவி அல்ஹாஜ் ஏ.ஜே.அப்துர் ரஊப் மிஸ்பாஹி ஆரம்பித்து வைத்தார்.

 

Popular

More like this
Related

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...