ஐ.நா கோப்-27 மாநாட்டின் துணைத் தலைவராக பாகிஸ்தான் பிரதமர்!

Date:

ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு – COP27, மாநாட்டின் துணைத் தலைவர் பதவியை திங்களன்று பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பிடம் ஒப்படைப்பதாக அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 195 நாடுகளில், அவசர காலநிலை செயல்திட்டத்தின் அவசியம் குறித்து, உலகளாவிய மற்றும் பிராந்திய மன்றங்களில் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் எழுப்பிய குரலின் விளைவாக, பாகிஸ்தானுக்கு இந்த கௌரவம் கிடைத்துள்ளது.

எகிப்து அதிபர் அப்துல் ஃபத்தா அல்-சிசி, COP-27 கூட்டத்திற்கு இணைத் தலைவராக பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பை அழைத்துள்ளார்.

நவம்பர் 6-8 வரை எகிப்தின் ஷர்ம்-எல்-ஷேக்கில் நடைபெறும் வட்டமேசை மாநாட்டிற்கு பிரதமர் ஷெரீப் எகிப்து அதிபர் மற்றும் நோர்வேயின் பிரதமருடன் இணைந்து தலைமை தாங்குவார்.

COP27 இல் உலகத் தலைவர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொள்வார்கள்.

காலநிலை மாற்றம் மற்றும் நிலையான தீர்வுகளுக்கான தேவை குறித்து ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட 27வது கூட்டமாக இது இருக்கும்.

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...