காலிமுகத்திடல் போராட்டத்தில் குழந்தைகளை துன்புறுத்தியதாக பொலிஸார் மீது முறைப்பாடு

Date:

கொழும்பு  காலிமுகத்திடல் மைதானத்தில் நேற்று (09) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிறுவர்களை பயமுறுத்தி துஷ்பிரயோகம் செய்து பொலிஸ் உத்தியோகத்தர் குழுவொன்று செயற்பட்ட விதம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்  ஜோசப் ஸ்டாலின் மற்றும் செயற்பாட்டாளர்கள் குழுவினர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.

அதற்கமைய மதிவெலவில் உள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு மேற்பார்வையாளரிடம் சென்று முறைப்பாடு செய்துள்ளனர்.

நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட 15 வயது குழந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதை காணொளி காட்சிகளும், மற்றொரு காணொளியில் தாயொருவர் தனது குழந்தையிடமிருந்து இழுத்துச் செல்லப்படுவதையும் சமூக ஊடகங்களில் காட்டப்பட்டன.

போராட்டக்காரர்கள் மற்றும் குழந்தைகள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட காவல்துறை மிருகத்தனத்தை சமூக ஊடகங்கள் கடுமையாகக் கண்டித்துள்ளன.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...