கொட்டகலை – போகாவத்த மாணவி தாக்குதல் சம்பவம்: அதிபர் இடமாற்றம்!

Date:

நுவரெலியா, கொட்டகலை பிரதேசத்தில் மாணவி ஒருவரை துடைப்பத்தால் கொடூரமாக தாக்கிய பாடசாலை அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அதிபர் பிரதேச வலயக் கல்வி அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே தெரிவித்துள்ளார்.

பாடசாலையின் 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவரை பாடசாலையின் விழாவிற்காக பணம் வழங்காத காரணத்தினால் பாடசாலை அதிபர் தாக்கியுள்ளார்.

தனது சகோதரர் கேட்ட பணத்தை வழங்காததால் அதிபர் தம்மை தகாத வார்த்தைகளால் திட்டியதாக காயமடைந்த குழந்தை தெரிவித்தது.

பின்னர் தனது சகோதரர் சார்பாக இந்த விவகாரத்தில் தலையிட்டதற்காக தன்னை துடைப்பத்தால் தாக்கியதாக குழந்தை கூறியது. “அருகில் இருந்த எங்கள் தந்தையிடம் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறிய போதிலும், அவர் என்னை துடைப்பத்தால் அடித்துக் கொண்டே இருந்தார். வகுப்பறைக்குத் திரும்பிய பிறகும், கத்த வேண்டாம் என்று துடைப்பக் கட்டையால் என்னை அடித்தான்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...