கொட்டகலை – போகாவத்த மாணவி தாக்குதல் சம்பவம்: அதிபர் இடமாற்றம்!

Date:

நுவரெலியா, கொட்டகலை பிரதேசத்தில் மாணவி ஒருவரை துடைப்பத்தால் கொடூரமாக தாக்கிய பாடசாலை அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அதிபர் பிரதேச வலயக் கல்வி அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே தெரிவித்துள்ளார்.

பாடசாலையின் 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவரை பாடசாலையின் விழாவிற்காக பணம் வழங்காத காரணத்தினால் பாடசாலை அதிபர் தாக்கியுள்ளார்.

தனது சகோதரர் கேட்ட பணத்தை வழங்காததால் அதிபர் தம்மை தகாத வார்த்தைகளால் திட்டியதாக காயமடைந்த குழந்தை தெரிவித்தது.

பின்னர் தனது சகோதரர் சார்பாக இந்த விவகாரத்தில் தலையிட்டதற்காக தன்னை துடைப்பத்தால் தாக்கியதாக குழந்தை கூறியது. “அருகில் இருந்த எங்கள் தந்தையிடம் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறிய போதிலும், அவர் என்னை துடைப்பத்தால் அடித்துக் கொண்டே இருந்தார். வகுப்பறைக்குத் திரும்பிய பிறகும், கத்த வேண்டாம் என்று துடைப்பக் கட்டையால் என்னை அடித்தான்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...