கோட்டாபயவுக்கு பொருளாதார ஆலோசனைக் கூறியவர்களை அலி சப்ரி வெளிப்படுத்துகிறார்!

Date:

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பொருளாதாரம் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக மூன்று பொருளாதார நிபுணர்கள் நியமிக்கப்பட்டிருந்ததாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஐ.எம்.எஃப். தொலைக்காட்சி உரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

குறித்த பொருளாதார ஆலோசனைக் குழுவில் இந்திரஜித் குமாரசுவாமி, சாந்த தேவராஜன் மற்றும் ஷாமினி குரே ஆகியோர் உறுப்பினர்களாக இருந்ததாக அவர் கூறினார்.

கடந்த காலங்களில் பொருளாதார நெருக்கடிக்கு எல்லாம் தெரியும் என்ற அரசின் திமிர்த்தனமான சிந்தனையே பெரும் சிக்கலாக இருந்தது என்றும் அவர் கூறினார்.

பொருளாதார ரீதியாக முன்னாள் ஜனாதிபதி ஒரு சில ஆலோசகர்களை மட்டுமே நம்பியிருந்ததாகவும், ஆனால் அவர்கள் வழங்கிய அறிவுரைகள் தவறானவை எனவும், நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் முன்னைய அரசாங்கத்திற்கு தொலைநோக்குப் பார்வை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், டொலரை ஒரே இடத்தில் வைத்து, கையிருப்பு முழுவதையும் செலவழித்து ரூபாயை நிலைநிறுத்த, அமைப்பில் இணையாதது போன்ற காரணங்களால் நாட்டின் பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்தார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...