சமூக வலைதளங்களில் வைரலான ஆசிரியர்களின் நடனம் குறித்து அதிகாரிகளின் முடிவு!

Date:

அண்மைய நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் பெண் ஆசிரியர்கள் நடனமாடும் காணொளி தொடர்பான விசாரணைகள் குறித்து மேல்மாகாண கல்வி திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் ஸ்ரீலால் நோனிஸின் கையொப்பத்துடன் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சிறுவர் தினத்தை முன்னிட்டு பாடசாலையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற கூட்டுச் செயற்பாடாகவே ஆசிரியையின் நடனம் தொடர்பான சம்பவம் வெளிவருவதாக அது தொடர்பான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, இது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லை எனவும் உரிய அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு கதிரான கனிஷ்ட கல்லூரியில் நடைபெற்ற சிறுவர் தின கொண்டாட்டத்தின் போது பாடசாலை ஆசிரியை ஒருவர் மாணவர்களுடன் நடனமாடுவதைக் காட்டும் காணொளி ஒன்று அண்மையில் சமூக ஊடகங்களில் பரவியது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...