தடைப்பட்டிருந்த வடக்கு ரயில் போக்குவரத்து சீர்செய்யப்பட்டது!

Date:

ரயில் ஒன்று தடம்புரண்டமையால், வடக்கு மார்க்கத்தில் ரயில் பாதையில் ஏற்பட்டிருந்த பாதிப்பு தற்போது சீராக்கப்பட்டுள்ளது.

சரக்குகளை ஏற்றிச்செல்லும் ரயில், வெல்லவ பகுதியில் நேற்றிரவு தடம்புரண்டது.

இதன்காரணமாக, காங்கேசன்துறை முதல் கொழும்பு – கோட்டை நோக்கி பயணித்த ரயில் சேவை, மஹவ ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

அத்துடன், கொழும்பு – கோட்டையிலிருந்து வடக்கு நோக்கி பயணித்த ரயில் சேவை குருநாகல் வரையில் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வடக்கு ரயில் சேவை தற்போது வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...