தமிழர் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஜனாதிபதி எடுத்த அதிரடி நடவடிக்கை!

Date:

நல்லிணக்கத்திற்கான அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது.

நேற்று (ஒக்.17) பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த அமைச்சரவை உபகுழுவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

பிரதமர் தினேஷ் குணவர்தன, நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோர் இந்த குழுவில் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புலம்பெயர் தமிழர்களின் பிரச்சினைகள் மற்றும் சித்தாந்தங்கள், தமிழ் கட்சிகள், நாட்டிலுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் மற்றும் சித்தாந்தங்கள் குறித்து ஆராய்ந்து நல்லிணக்கம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக இந்த உப குழு நியமிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...