நல்லிணக்கம் தொடர்பாக அமைச்சரவை உபகுழு!

Date:

நல்லிணக்கத்திற்கான அமைச்சரவை உபகுழுவை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (18) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் வடக்கு கிழக்கில் மோதலுக்குப் பின்னரான மீள்குடியேற்றம், காணி மற்றும் காணாமல் போனோர் தொடர்பான மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை முன்வைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்த உபகுழு ஸ்தாபிக்கப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பிரதமர் தினேஸ் குணவர்தன, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், இரண்டு தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளும் நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும்தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...