நாவலப்பிட்டிக்கு சென்ற மகிந்தவுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு!

Date:

நாவலப்பிட்டி பகுதியில் இடம்பெறவிருந்த கூட்டத்துக்கு வருகைத்தந்த நிலையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

‘ஒன்றாக எழுவோம்’ எனும் தெரிப்பொருளில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டமொன்று நாவலப்பிட்டியில் இடம்பெறுகின்றது.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவின் ஏற்பாட்டில் இந்த கூட்டம் இடம்பெறுகின்றது.

அதன்படி கூட்டத்தில் கலந்துகொள்ள இன்று முற்பகல் மகிந்த நாவலப்பிட்டிக்கு சென்ற நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள், உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அப்பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன், பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால உறுப்பினர் ஸர்ஸம் காலிதின் ஜனாஸா கஹட்டோவிட்டவில் நல்லடக்கம்: ரவூப் ஹக்கீமும் பங்கேற்பு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினரும் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நீண்டகாலம் கடமையாற்றியவரும்...

இன்று பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற நிலை

நாளை, (03) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்...

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...