நாவலப்பிட்டிக்கு சென்ற மகிந்தவுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு!

Date:

நாவலப்பிட்டி பகுதியில் இடம்பெறவிருந்த கூட்டத்துக்கு வருகைத்தந்த நிலையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

‘ஒன்றாக எழுவோம்’ எனும் தெரிப்பொருளில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டமொன்று நாவலப்பிட்டியில் இடம்பெறுகின்றது.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவின் ஏற்பாட்டில் இந்த கூட்டம் இடம்பெறுகின்றது.

அதன்படி கூட்டத்தில் கலந்துகொள்ள இன்று முற்பகல் மகிந்த நாவலப்பிட்டிக்கு சென்ற நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள், உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அப்பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன், பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...