‘பாடசாலைகளில் நீர் விநியோகம் துண்டிக்கப்படாது’

Date:

நீர் கட்டணத்தை செலுத்தாத பாடசாலைகளுக்கு நீர் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை எடுத்த தீர்மானத்தை நிறுத்தியுள்ளதாக கல்வி அமைச்சர் டாக்டர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

உரிய நீர் கட்டணங்களை செலுத்தும் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படும் வரை எந்தவொரு பாடசாலையின் நீர் இணைப்பையும் துண்டிக்க வேண்டாம் என கல்வி அமைச்சர் நீர் வழங்கல் சபையிடம் விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்தவிற்கும் நீர் வழங்கல் சபையின் தலைவருக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றுள்ளது.

இதன்படி, நீர் கட்டணம் செலுத்தப்படாத பாடசாலைகளுக்கு நீர் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை நிறுத்துவதற்கு நீர் வழங்கல் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...