‘பாடசாலைகளில் நீர் விநியோகம் துண்டிக்கப்படாது’

Date:

நீர் கட்டணத்தை செலுத்தாத பாடசாலைகளுக்கு நீர் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை எடுத்த தீர்மானத்தை நிறுத்தியுள்ளதாக கல்வி அமைச்சர் டாக்டர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

உரிய நீர் கட்டணங்களை செலுத்தும் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படும் வரை எந்தவொரு பாடசாலையின் நீர் இணைப்பையும் துண்டிக்க வேண்டாம் என கல்வி அமைச்சர் நீர் வழங்கல் சபையிடம் விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்தவிற்கும் நீர் வழங்கல் சபையின் தலைவருக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றுள்ளது.

இதன்படி, நீர் கட்டணம் செலுத்தப்படாத பாடசாலைகளுக்கு நீர் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை நிறுத்துவதற்கு நீர் வழங்கல் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

Popular

More like this
Related

‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’: வரலாற்று நூல் வெளியீட்டு விழா கண்டியில்!

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு சேவைகள்...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் ரஷ்ய தூதுவர் இடையில் முக்கிய சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் நய்யார் நசீர்,...

தேர்தலுக்குத் தயாராகும் தமிழகம்: இன்றுடன் பிரசாரங்கள் நிறைவு

ஏப்ரல் 23ம் திகதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில்,...

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...