புத்தளத்தில் ஒழுக்கக் கேடுகளை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை!

Date:

புத்தளம் பிரதேசத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை, சிறுவர் துஷ்பிரயோகம், திருட்டு போன்ற ஒழுக்க சீர்கேடுகளை கட்டுப்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடல் புத்தளம் பெரிய பள்ளிவாசலில் நேற்று (28) பிற்பகல் இடம்பெற்றது.

இந் நிகழ்வு புத்தளம் பகுதி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ஹேமசிறி, மற்றும் சமூக பொலிஸ் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி அசோக தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது இவ்வாறான ஒழுக்க சீர்கேடுகளை கட்டுப்படுத்துவதற்கு ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இணக்கப்பாடும் எடுக்கப்பட்டது.

இந் நிகழ்வில் ,புத்தளம் நகரபிதா முஹம்மது ரபீக், புத்தளம் நகர எல்லைக்குட்பட்ட பாடசாலை அதிபர்கள், பள்ளிவாசல் தலைவர்கள் மற்றும் சபை உறுப்பினர்கள், இளைஞர் சமூகம், பிரதேச சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

புத்தளம் பெரிய பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் ஜனாப் மற்றும் அப்துல் முஜீப் மௌலவி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

பாகிஸ்தானிலிருந்து மேலும் ஒருதொகை நிவாரணம் இலங்கைக்கு கையளிப்பு!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பாகிஸ்தான் அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட மனிதாபிமான...

தஃவா அமைப்புக்களை பரஸ்பரம் புரிந்துகொள்ள வைப்பதில் பங்காற்றிவரும் அனர்த்த நிவாரணப்பணிகள்

அண்மையில் ஏற்பட்ட டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கம்பளை மற்றும் கெலிஓயா...

அவுஸ்திரேலியாவின் துப்பாக்கிச் சூடு குறித்து ஜனாதிபதி அனுர இரங்கல்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி, பொண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 16...

ஹமாஸின் மூத்த தளபதி ரேத் சயீத் காசாவில் படுகொலை!

காசாவில் ஹமாஸின் மூத்த தளபதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்...