மஹ்ரம்- குடும்ப ஆணின் துணையின்றி புனித பயணம் மேற்கொள்ள சவூதி அரசு பெண்களுக்கு அனுமதி!

Date:

ஹஜ் உம்ரா பயணத்தின் போது பெண் யாத்ரீகர்கள் இனி ஆண் பாதுகாவலருடன் செல்லத் தேவையில்லை என்று சவூதி அரசு அறிவித்துள்ளது.

அனைவருக்கும் ஹஜ் பயணச் செலவைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக சவூதி அரேபியா தற்போது அறிவித்துள்ளது.

ஹஜ் அல்லது உம்ரா செய்ய விரும்பும் யாத்ரீகர் இனி “மஹ்ரம்” எனப்படும் ஆண் பாதுகாவலர் அல்லது பரிவாரங்களுடன் இருக்க வேண்டியதில்லை.

சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் தவ்பிக் பின் ஃபவ்ஸான் அல்-ரபியா இதனைத் தெரிவித்துள்ளார். இது பெண்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கெய்ரோவில் உள்ள சவூதி தூதரகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் தவ்பிக் பின் ஃபவ்ஸான் அல்-ரபிஆ மேலும் தெரிவிக்கையில்,

“ஒரு பெண்ணுடன் மஹ்ரம் செல்ல வேண்டுமா என்ற நீண்டகால சர்ச்சைக்குக்கு முடிவு கட்டப் பட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கு உம்ரா விசாவிற்கு ஒதுக்கீடு அல்லது வரம்பு இல்லை என்றும் அவர் தெரிவித்தார். எந்த விசாவுடனும் சவூதி அரேபியாவிற்குள் வாருங்கள். உம்ரா செய்ய அனுமதிக்கப்படுவீர்கள்” என்றார்.

மக்காவில் உள்ள பெரிய மசூதியை விரிவுபடுத்துவதற்கான செலவு ஏற்கனவே கிட்டத்தட்ட 200 பில்லியன் சவூதி  ரியால்கள் அல்லது 53 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது என்றும் அல்-ரபியா கூறினார். இது வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் விலையுயர்ந்த விரிவாக்கமாகும்.

ஹஜ் அமைச்சரின் முன்னாள் ஆலோசகர் ஒருவர், கருத்துத் தெரிவிக்கையில்,சவூதி அரேபியாவின் 2030 தொலைநோக்குப் பார்வையை அடைவதற்காகவே இந்த வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இஸ்லாத்தின் சட்டத்தின் பிரகாரம் பெண்கள், குடும்ப உறுப்பினர்களின் துனையின்றி ஹஜ் உம்ரா வணக்கங்கள் உட்பட நீண்ட பிரயாணங்களை மேற்கொள்வது தடைசெய்யப்பட்டதாகும்.

மூலம்: அரப் நியூஸ்

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழைக்கான சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...