பேக்கரி உற்பத்திகளின் விலை மீண்டும் அதிகரிக்கலாம்: பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்!

Date:

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி இன்று அமுலுக்கு வருவதை அடுத்து பேக்கரி உற்பத்திகளின் விலை மீண்டும் அதிகரிக்கலாம் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

புதிய நடைமுறையின்படி, பாண் உட்பட்ட உற்பத்திப் பொருட்களுக்கு புதிய வரி விதிக்கப்படும் என சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

கோதுமை மாவுக்கு வரி விதிக்கப்படவுள்ளமையால், பிரதான கோதுமை மா இறக்குமதியாளர்கள் தமது விலையை அதிகரித்தால் இயல்பாகவே பேக்கரி தொழில் பாதிக்கப்படும்.

எனவே இந்த அனைத்து காரணிகளின் விளைவாக பேக்கரி பொருட்களின் விலை உயர்வை தவிர்க்கமுடியாது.

எனினும் அவை எந்த விகிதத்தில் அதிகரிக்கப்படும் என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லை என்று ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். உற்பத்திகளின் விலை மீண்டும் அதிகரிக்கலாம் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...