பேக்கரி உற்பத்திகளின் விலை மீண்டும் அதிகரிக்கலாம்: பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்!

Date:

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி இன்று அமுலுக்கு வருவதை அடுத்து பேக்கரி உற்பத்திகளின் விலை மீண்டும் அதிகரிக்கலாம் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

புதிய நடைமுறையின்படி, பாண் உட்பட்ட உற்பத்திப் பொருட்களுக்கு புதிய வரி விதிக்கப்படும் என சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

கோதுமை மாவுக்கு வரி விதிக்கப்படவுள்ளமையால், பிரதான கோதுமை மா இறக்குமதியாளர்கள் தமது விலையை அதிகரித்தால் இயல்பாகவே பேக்கரி தொழில் பாதிக்கப்படும்.

எனவே இந்த அனைத்து காரணிகளின் விளைவாக பேக்கரி பொருட்களின் விலை உயர்வை தவிர்க்கமுடியாது.

எனினும் அவை எந்த விகிதத்தில் அதிகரிக்கப்படும் என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லை என்று ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். உற்பத்திகளின் விலை மீண்டும் அதிகரிக்கலாம் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...