பேருந்து கட்டண திருத்தம் குறித்து போக்குவரத்து ஆணைக்குழுவின் தீர்மானம் இன்று!

Date:

எரிபொருள் விலை திருத்தத்தின் படி பஸ் கட்டணத்தை திருத்த முடியுமா? இல்லை? இது குறித்து இன்று அறிவிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா, தேசிய பஸ் கட்டணக் கொள்கையின் படி, கட்டணங்களை திருத்துவதற்கு எரிபொருளின் விலை 4 சதவீதத்திற்கும் அதிகமாக மாற வேண்டும்.

இதுதொடர்பான கணக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு, பஸ் கட்டணங்கள் திருத்தப்படுமா இல்லையா என்பது இன்று அறிவிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நேற்றிரவு ஏற்பட்ட எரிபொருள் விலை குறைப்புக்கு அமைய பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என தனியார் பஸ் சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

பஸ் கட்டணத்தை திருத்தும் வகையில் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட வேண்டுமென தனியார் பஸ் சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பெற்றோல் விலை குறைப்புடன் ஒப்பிடுகையில் வாடகை முச்சக்கரவண்டி கட்டணங்கள் குறைக்கப்படுமா என்பது குறித்து இன்று அறிவிக்கப்படும் என நிபுணத்துவ முச்சக்கரவண்டி சங்கத்தின் செயலாளர் நிஷாந்த குமார தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...