பேருந்து கட்டண திருத்தம் குறித்து போக்குவரத்து ஆணைக்குழுவின் தீர்மானம் இன்று!

Date:

எரிபொருள் விலை திருத்தத்தின் படி பஸ் கட்டணத்தை திருத்த முடியுமா? இல்லை? இது குறித்து இன்று அறிவிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா, தேசிய பஸ் கட்டணக் கொள்கையின் படி, கட்டணங்களை திருத்துவதற்கு எரிபொருளின் விலை 4 சதவீதத்திற்கும் அதிகமாக மாற வேண்டும்.

இதுதொடர்பான கணக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு, பஸ் கட்டணங்கள் திருத்தப்படுமா இல்லையா என்பது இன்று அறிவிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நேற்றிரவு ஏற்பட்ட எரிபொருள் விலை குறைப்புக்கு அமைய பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என தனியார் பஸ் சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

பஸ் கட்டணத்தை திருத்தும் வகையில் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட வேண்டுமென தனியார் பஸ் சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பெற்றோல் விலை குறைப்புடன் ஒப்பிடுகையில் வாடகை முச்சக்கரவண்டி கட்டணங்கள் குறைக்கப்படுமா என்பது குறித்து இன்று அறிவிக்கப்படும் என நிபுணத்துவ முச்சக்கரவண்டி சங்கத்தின் செயலாளர் நிஷாந்த குமார தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

மாணவர்களுக்கான காலணி வவுச்சர்கள் : செல்லுபடி காலம் நீடிப்பு!

2026 ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி...

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டச் சீர்திருத்தங்களை முன்னெடுக்க அனைத்துத் தரப்பினரும் ஒருமித்துச் செயற்பட வேண்டும்!

-என்.எம்.எம்.மிஃப்லி முன்னாள் இறைவரி திணைக்கள ஆணையாளர்.       முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டமூலம்: ஆண் பெண்...

பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவு

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன்...

பெண்ணியம் பேசிய அதிகாரியின் மறுபக்கம்: ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணங்களில் சிக்கிய ஐக்கிய அரபு அமீரக அதிகாரி ஹிந்த் அல் ஒவைஸ்.

சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein)...