பொருளாதார சீர்திருத்தம் குறித்து சர்வதேச நாணய நிதிய முகாமைத்துவ பணிப்பாளருடன் பேச்சு!

Date:

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகாமுராவை வொஷிங்டனில் சந்தித்துள்ளார்.

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த அரசாங்கம் அமுல்படுத்திய பொருளாதார சீர்திருத்தங்களில் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையின் மீட்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கு ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய அபிவிருத்தி நாடுகளுடன் நெருக்கமாக செயற்படுவதாக உலக வங்கி உறுதியளித்துள்ளது.

வொஷிங்டனில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவை சந்தித்த போது உலக வங்கியின் தெற்காசியாவிற்கான உப தலைவர் மார்ட்டின் ரைசர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

இதற்கிடையில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட இலங்கை பிரதிநிதிகள் சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேச அமைப்புகளின் அதிகாரிகள் பலரை சந்தித்துள்ளனர்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...