மண்சரிவு எச்சரிக்கை: நாளை வரை நீடிப்பு!

Date:

மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை நாளை பிற்பகல் 3 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக காலி மாவட்டத்தின் அக்மீமன, பத்தேகம, களுத்துறை மாவட்டத்தின் பாலிந்த நுவர, வலல்லாவிட்ட, தொடங்கொட, இங்கிரிய மற்றும் புலத்சிங்கள மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ ஆகிய பகுதிகளுக்கு 02 ஆம் கட்டத்தின் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பிரதேசங்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் 100 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால், தொடர்ந்து மழை பெய்யுமாயின், மண்சரிவு, பாறைகள் சரிவு, மண்மேடு சரிவு குறித்து அவதானமாக இருக்குமாறும், தேவைப்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தயாராகுமாறும் இந்த பிரதேச மக்களை அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, காலி மாவட்டத்தில் யக்கலமுல்ல, நாகொட, களுத்துறை மாவட்டத்தில் மத்துகம, மில்லனிய, அகலவத்தை, கேகாலை மாவட்டத்தில், மாவனெல்ல, புலத்கொஹூபிடிய, வரகாபொல, ருவன்வெல்ல, எட்டியந்தோட்டை, தெரணியகலை, இரத்தினபுரி மாவட்டத்தில் கலவான, குருவிட்ட, இரத்தினபுரி, நிவித்திகல, ஹெலியகொட, அயகம மற்றும் கிரியெல்ல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மஞ்சள் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் குருவி, நிஹெல்யகோ, இரத்தினபுரி, நிஹெல்யகோ, நிஹெல்யகொட, கலவான, குருவிட்ட, நிவித்திகல, அஹெலியகொட, அயகம மற்றும் கிரியெல்ல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மஞ்சள் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’: வரலாற்று நூல் வெளியீட்டு விழா கண்டியில்!

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு சேவைகள்...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் ரஷ்ய தூதுவர் இடையில் முக்கிய சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் நய்யார் நசீர்,...

தேர்தலுக்குத் தயாராகும் தமிழகம்: இன்றுடன் பிரசாரங்கள் நிறைவு

ஏப்ரல் 23ம் திகதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில்,...

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...