மஹிந்தவின் புதிய பயணம் ஒரு ‘செயற்கை’ வேலைத்திட்டம்!: மைத்திரி

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன களுத்துறையில் ஆரம்பித்துள்ள புதிய பயணம் செயற்கையானது என முன்னாள் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அதேநேரம் அவர்களின் நிகழ்ச்சி ஒரு நகைச்சுவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று வழிபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொள்ளும் நம்பிக்கையில் வேறு சிலர் இருக்கிறார்களா என்பது தமக்கு தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சர்வகட்சி அரசாங்கமொன்றை முன்மொழிந்த போதிலும் அது நிறைவேற்றப்படவில்லை, சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படுமாயின் நாடு சர்வதேசத்தின் ஆதரவையும் உதவிகளையும் தொடர்ந்தும் பெறும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த ‘நபிகள் நாயகம்’ பற்றிய கண்காட்சி தொடர்பான படங்கள்!

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த 'பிரபஞ்சத்துக்கு அருளான முஹம்மது நபி ஸல்லல்லாஹு...

165,512 வாகன இலக்கத் தகடுகள் இன்னும் நிலுவையில்!

புதிய வாகன இலக்கத் தகடுகளை வழங்கும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதத்தை போக்குவரத்து,...

நவம்பர் 30ஆம் திகதி முதல் பஸ்களில் வங்கி அட்டைகள் மூலம் கட்டணம் செலுத்த வாய்ப்பு.

டிக்கெட் இயந்திரங்கள் மூலம் பயணச்சீட்டுக்கள் வழங்கப்படும் பஸ்களில், பயணிகள் வங்கி அட்டைகளைப்...

30ஆவது வருட நிறைவையிட்டு கொழும்பு பங்குச் சந்தையில் மணியோசை எழுப்பிய CDB

நிதியியல் விசேடத்துவம் மற்றும் புத்தாக்கத்தில் தனது வலுவான இடத்தை வலியுறுத்தியபடி, இலங்கையின்...