ரஷ்யாவில் துப்பாக்கிச்சூடு: 11 பேர் பலி

Date:

ரஷ்யாவில் இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 11 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில் 15 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் உக்ரைனில் கடமைக்காக களமிறங்க தயாராகிக் கொண்டிருந்த துருப்புக் குழுவினர் என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை (அக்.15) காலை ஆயுதம் ஏந்திய இருவரால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் எல்லையை ஒட்டிய பெல்கொரோட் பிராந்தியத்தில் போராட முன்வந்த மற்றும் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த ஒரு குழுவினர் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு ரஷ்ய அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், தாக்குதல் நடத்திய இருவர் பயங்கரவாதிகள் என்றும், சம்பவத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் அவர்கள் கொல்லப்பட்டதாகவும் கூறியது.

உக்ரைனுக்கு எதிரான சிறப்பு இராணுவ நடவடிக்கையில் தானாக முன்வந்து பங்கேற்க விருப்பம் தெரிவித்த நபர்கள் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியவர்கள் தஜிகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் மதம் தொடர்பான தகராறில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் உக்ரைன் ஜனாதிபதியின் ஆலோசகர் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 7ஆண்டுகள் நிறைவு

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும்...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழைக்கான சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...