வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விசேட சலுகை!

Date:

தேசிய பூங்கா, தேசிய மிருக காட்சிசாலை மற்றும் வனாந்தரங்களை பார்வையிடுவதற்காக வருகைத்தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அந்தநாட்டு நாணய அலகு மூலம் அனுமதிப் பத்திரங்களை வழங்க வனஜீராசிகள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன், உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக இணையத்தளம் ஊடாக அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கான முறைமைப்படுத்தல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இது தொடர்பான கலந்துரையாடல்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த கலந்துரையாடல்களுக்கமைய இணைத்தளம் ஊடாக அனுமதிப் பத்திரங்களை வழங்கும் முறைமைப்படுத்தல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

நாட்டின் வருமானத்தை அதிகரிப்தே இதன் பிரதான நோக்கமாகும். அத்துடன் குறித்த நடவடிக்கைகள் எதிர்வரும் இரு மாதங்களில் நிறைவு பெறவுள்ளதாக வனஜீவராசிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’: வரலாற்று நூல் வெளியீட்டு விழா கண்டியில்!

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு சேவைகள்...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் ரஷ்ய தூதுவர் இடையில் முக்கிய சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் நய்யார் நசீர்,...

தேர்தலுக்குத் தயாராகும் தமிழகம்: இன்றுடன் பிரசாரங்கள் நிறைவு

ஏப்ரல் 23ம் திகதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில்,...

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...