2022 / 2023 ஆம் ஆண்டுக்கான 12வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு விழா ஆரம்பம்!

Date:

முப்படை வீரர்களின் விளையாட்டு திறமைகள் வெளிக்கொணரும் நிகழ்வான ‘பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு’ நிகழ்வுகள் நேற்றைய தினம் பனாகொட இராணுவ உள்ளக அரங்கில் விமர்சையாக ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனெரல் கமால் குணரத்ன கலந்துகொண்டதுடன் பாதுகாப்பு படை பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு குழு தலைவரும் இலங்கை விமானப்படை தளபதியுமான எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன இலங்கை இராணுவ மற்றும் கடற்படை தளபதிகளும் விசேட அதிதிகளாக கலந்துகொண்டனர்

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் பரிந்துரை செய்யப்பட்ட விளையாட்டு வருடாந்த அட்டவணைப்படி முக்கியமான ஒரு விளையாட்டாக அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும் இலங்கையினுள் இடம்பெறும் விளையாட்டுகளில் முக்கியமான ஒன்ற பாதுகாப்பு சேவைகள் விளையாட்டின் மூலம் தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கான அனுபவங்கள் இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களுக்கு கிடைக்கப்பெறுகின்றது.

முப்படையில் இராணுவப் பணிக்காக இணைக்கப்படும் வீர வீராங்களின் விளையாட்டு திறன்களை இனம்கண்டு அவர்களின் திறன்களை மேன்மைப்படுத்துவதற்காக முப்படை விளையாட்டு சம்மேளனத்தின் மிக பெரும் சேவையாகவும் வெற்றிகரமான விளையாட்டு தொடராக இந்த பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு நிகழ்வுகள் கருத்தில் கொள்ளப்படுகிறது

இந்த பாதுகாப்பு சேவைகள் விளையாட்டின்மூலம் திறன்களை வெளிப்படுத்தி சர்வதேச ரீதியில் தாய் நாட்டிற்காக இராணுவப்படை சார்பாக 272 பதக்கமும் இலங்கை விமானப்படை சார்பாக 40 பதக்கமும் இலங்கை கடற்படை சார்பாக 30 பதக்கங்களும் பெற்றுக்கொடுத்துள்ளனர்

பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு போட்டித்தொடரில் 39 விளையாட்டு பிரிவில் போட்டிகள் 2022 ஒக்டோபர் 26ஆம் திகதி தொடக்கம் 2023 ஒக்டோபர் மாதம் இராண்டாம் வாரம்வரை இந்த போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இந்த ஆரம்ப விழாவில் முப்படை சிரேஷ்ட அதிகாரிகள் உற்பட முப்படை சார் விளையாட்டு வீரவீராங்கனைகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாதுகாப்பு மற்றும் தற்காப்பு ஒத்துழைப்பு: சிரியா சென்றடைந்தார் உக்ரைன் ஜனாதிபதி.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கி மற்றும் துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடான்...

புத்தாண்டு காலத்தில் இணையவழி மோசடி: பொலிஸார் எச்சரிக்கை

இணையவழி பணப்பரிமாற்றங்களின் போது பொதுமக்களை ஏமாற்றி முன்னெடுக்கப்படும் நிதி மோசடி குறித்து...

மத்திய கிழக்கு மோதல்: ஐநா உடனடியாகத் தலையிடக் கோரி கொழும்பில் ஐநா அலுவலகத்தில்’தர்மசக்தி அமைப்பு’ மகஜர் கையளிப்பு.

இலங்கையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மத நல்லிணக்கத்திற்காகப் பணியாற்றி வரும் பௌத்த,...

QR கொடுப்பனவை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி

புதிய QR முறை கொடுப்பனவுக்கு அப்பாற் சென்ற கலாசார ரீதியிலான பிணைப்பாக...