21ஆவது அரசியலமைப்பு திருத்தம் இன்று முதல் அமுலுக்கு வருகிறது!

Date:

அண்மையில் பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட 22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று தனது ஒப்புதலைப் பதிவு செய்தார்.

22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் 10 ஆகஸ்ட் 2022 அன்று அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அப்போது, ​​அதற்கு எதிரான மனுக்கள் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, நீதித்துறை விவகாரங்களுக்கான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவில் திருத்தங்கள் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

ஒக்டோபர் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் இருபத்தி இரண்டாவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்றது.

இரண்டாம் வாசிப்பின் முடிவில் ஆதரவாக 179 வாக்குகளும் எதிராக 1 வாக்கும் பதிவாகின.

அதன் பின்னர், சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பில், குழுவின் போது திருத்தங்கள் இணைந்த பின்னர், அதற்கு ஆதரவாக 174 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டன.

அதன்படி, இருபத்தி ஒன்றாவது அரசியலமைப்பு திருத்தமாக இருபத்தி இரண்டாவது அரசியலமைப்பு திருத்த மசோதா இன்று (அக்.31) முதல் அமலுக்கு வருகிறது.

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...

சுரேஷ் சலே பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...