6 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்தது லங்கா சதொச!

Date:

லங்கா சதொச நிறுவனம் 6 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை இன்று முதல் அமுலாகும் வகையில் குறைத்துள்ளது.

இதற்கமைய ஒரு கிலோகிராம் உள்ளூர் உருளைக்கிழங்கின் விலை 35 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 430 ரூபாயாக இருந்த ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கு தற்போது 395 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ கொண்டைக்கடலையின் விலை, 35 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 685 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கொண்டைக்கடலை, தற்போது 650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிலோகிராம் சிகப்பு பருப்பின் விலை 17 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 415 ரூபாயாக இருந்த ஒரு கிலோகிராம் பருப்பு தற்போது 398 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோகிராம் நாட்டு சம்பாவின் விலை 08 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி 228 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் நாட்டு சம்பா 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும்  இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் வெள்ளை நாட்டரிசி,  வெள்ளை நாட்டரிசி, வெள்ளை சீனி,  ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...