அக்கரைப்பற்று புத்தகக் காட்சி-2022 ஆரம்பம்!

Date:

அக்கரைப்பற்று புத்தகக் காட்சி-2022 ஆரம்ப நிகழ்வு வெகு விமர்சையாக இடம்பெற்றது.

நிகழ்வு கலாநிதி ஹனிபா இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்றது.

இந்தநிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஜனாப் ரீ.எம்.எம்.அன்சார் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் எஸ்.நவநீதன் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

அக்கரைப்பற்று புத்தகக் காட்சி   (07) வெள்ளிக்கிழமை மாலை முதல் 6 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. பல்வேறு நூல்களின் அறிமுகம், ஒரு சில நூல் வெளியீடுகள் ஆகியன இடம்பெற்றன.

நூல் விற்பனை காலை 9.00 முதல் – காலை இரவு 10.00 மணி வரை நடைபெறும்.

வருடாந்தம் பிரம்மாண்டமாக இடம்பெற்று வரும் அக்கரைப்பற்று புத்தகக் காட்சியில் பெரியோர் முதல் சிறியோர் வரையான அனைத்து வயதினருக்கும் ஏற்ற புத்தகங்களையும் காகிதாதிகளையும் கொள்வனவு செய்யலாம்.

அக்கரைப்பற்று பிரதான வீதியிலுள்ள Meerasahib Square மற்றும் Zain Plaza காட்சியறையில் இது இடம்பெறுகின்றது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...