இறைத் தூதரை அறிமுகம் செய்யும் ‘සඳ දෙකඩ සඳ’ (நிலவைப் பிளந்த நிலவு) சிங்கள மொழி நூல் வெளியீட்டு விழா கொழும்பில்!

Date:

2022 மீலாதுன் நபியை முன்னிட்டு முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி எழுதப்பட்ட ‘සඳ දෙකඩ සඳ’ (நிலவைப் பிளந்த நிலவு) என்ற புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 25 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

பிரபல எழுத்தாளர் சமன் புஸ்ப லியனகே அவர்களினால் இந்த புத்தகம் சிங்கள மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

பஹன மீடியா நிறுவனத்தின் அனுசரணையில் இடம்பெறவுள்ள இந்த புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தில்  இடம்பெறவுள்ளது.

இதேவேளை நிகழ்வில் கொழும்பு மாவட்ட உதவி கல்வி பணிப்பாளர் கரவில கொட்டுவ தம்மாதிலக்க தேரர் விசேட உரையை நிகழ்த்தவுள்ளார்.

அரச உத்தியோகத்தர்கள், புத்திஜீவிகள், எழுத்தாளர்கள், உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொள்வார்கள்.

‘நியூஸ் நவ்’ இணையத்தளம் இந்நிகழ்ச்சிக்கான ஊடக அனுசரணையை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...