சீனாவினால் வழங்கப்பட்ட அரிசித் தொகுதியொன்று செவ்வாய்க்கிழமை (25) இலங்கை வந்தடைந்ததாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
‘நவியோஸ் ஜாஸ்மின்’ கொள்கலன் கப்பலில் 500 மெட்ரிக் டன் அரிசி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்த அரிசியின் வருகையை அடுத்து, சீனா இலங்கைக்கு வழங்கிய மொத்த உதவித்தொகை 6,000 மெட்ரிக் தொன்னாக அதிகரித்துள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.