இளைஞர்களிடையே வேகமாக பரவும் எச்.ஐ.வி தொற்று: மருத்துவ நிபுணர்

Date:

எச்.ஐ.வி தொற்று இப்போது 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே பரவுகிறது, இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இதுபோன்ற 50 வழக்குகள் பதிவாகியுள்ளன என்று தேசிய மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

16 பல்கலைக்கழக மாணவர்களும் மூன்று பாடசாலை மாணவர்களும் பதிவான வழக்குகளில் அடங்குவதாக  அவர் கூறினார்.

இலங்கையில் சுமார் 2,350 பேர் எச்.ஐ.விக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், சமூகத்தில் சுமார் 3,750 எச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

மேலும் பாலியல் கல்வியின்மை காரணமாக இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றுகள் அதிகரித்துள்ளதாக டொக்டர் ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

“எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் இரண்டும் வெவ்வேறு நோய்கள். இலங்கையில் எச்.ஐ.வி.க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் நீண்டகாலமாக சிகிச்சை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது பரிதாபத்துக்குரியது. இளைஞர்கள் போதைப்பொருள் பாவனையினாலும், குழுவாக கலந்துகொள்ளும் விருந்துகள் போன்ற சமூக நிகழ்வுகளினாலும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...