இளைஞர்களிடையே வேகமாக பரவும் எச்.ஐ.வி தொற்று: மருத்துவ நிபுணர்

Date:

எச்.ஐ.வி தொற்று இப்போது 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே பரவுகிறது, இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இதுபோன்ற 50 வழக்குகள் பதிவாகியுள்ளன என்று தேசிய மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

16 பல்கலைக்கழக மாணவர்களும் மூன்று பாடசாலை மாணவர்களும் பதிவான வழக்குகளில் அடங்குவதாக  அவர் கூறினார்.

இலங்கையில் சுமார் 2,350 பேர் எச்.ஐ.விக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், சமூகத்தில் சுமார் 3,750 எச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

மேலும் பாலியல் கல்வியின்மை காரணமாக இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றுகள் அதிகரித்துள்ளதாக டொக்டர் ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

“எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் இரண்டும் வெவ்வேறு நோய்கள். இலங்கையில் எச்.ஐ.வி.க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் நீண்டகாலமாக சிகிச்சை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது பரிதாபத்துக்குரியது. இளைஞர்கள் போதைப்பொருள் பாவனையினாலும், குழுவாக கலந்துகொள்ளும் விருந்துகள் போன்ற சமூக நிகழ்வுகளினாலும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...