கைதிகளின் பிரச்சினைகளை ஆராய நீதி அமைச்சர் வெலிக்கடை சிறைச்சாலைகளுக்கு சென்றார்!

Date:

சிறைக் கைதிகள், குறிப்பாக நீண்டகாலக் கைதிகள் எதிர்கொள்ளும் நடைமுறை மற்றும் சட்டப் பிரச்சினைகளை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கவனம் செலுத்தினார்.

அதேநேரம், கைதிகள் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட மீளாய்வுக் குழுக்களிடம் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரவித்துள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டதன் பின்னர் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, புதிய மீளாய்வுக் குழுக்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தற்போதுள்ள விதிகள் மற்றும் விதிமுறைகள், அனுதாபத்துடன் கருத்தில் கொண்டு கைதிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக திருத்தம் செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கான சட்டமூலங்கள் ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விஜேயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...