சனத் நிஷாந்தவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு

Date:

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (ஒக்டோபர் 13) உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறப்படும் வழக்கில் அவர் ஆஜராகாத காரணத்தினால் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் தண்டிக்கப்படாமைக்கான காரணங்களை சமர்பிப்பதற்காக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை இன்று நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கோரியுள்ளது.

கடந்த 29ம் திகதி மனு அனுப்பப்பட்டது.

பிரியலால் சிறிசேன மற்றும் விஜித குமார ஆகிய இரு சட்டத்தரணிகள் சமர்ப்பித்த முறைப்பாட்டின் பூர்வாங்க பரிசீலனைக்கு அமைய மேன்முறையீட்டு நீதிமன்றம்    இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஆகஸ்ட் 23 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்,  சனத் நிஷாந்த, போராட்டக்காரர்களுக்கு நீதவான்களால் பிணை வழங்கியதை விமர்சித்ததாகவும், நீதித்துறையின் கண்ணியத்தை அவர் குறைமதிப்பிற்கு உட்படுத்தியதாகவும், சட்டத்தின் ஆட்சிக்கு சவால் விட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.

மேலும், குறித்த அறிக்கையின் மூலம் நீதித்துறை மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கையை சிதைக்கும் வகையில் செயற்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சனத் நிஷாந்த தற்போது நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக கடமையாற்றி வருகின்றார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...