நாட்டின் நிலைமைகள் குறித்து பாராளுமன்றத்தில் விசேட விவாதம்!

Date:

நாட்டின் பொருளாதாரம் உட்பட நாட்டின் நிலை குறித்து எதிர்வரும் 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் விசேட விவாதம் நடத்துவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று தீர்மானித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்கவினால் இந்த பிரேரணை விவாதத்திற்கு முன்வைக்கப்பட்டுள்ளது.

அன்று காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை விவாதம் நடைபெறும்.

அன்றைய தினம் காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை கேள்வி கேட்கும் அமர்வு நடைபெறும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று (27) முற்பகல் 11.00 மணியளவில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடியது.

இதேவேளை, வரிச் சட்டமூலங்கள் மீதான விவாதம் எதிர்வரும் 9ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பத்தேகம சமித்த தேரர், டி.பி.ஏக்கநாயக்க, சந்திரகுமார விஜேகுணவர்தன, மற்றும் எஸ். மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரத்னசிங்கம் அவர்களுக்கு எதிர்வரும் 10ஆம் திகதி இரங்கல் விவாதம் நடைபெறவுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...