பாகிஸ்தானின் பிரபல ஊடகவியலாளர் கென்யாவில் சுட்டுக்கொலை!

Date:

பாகிஸ்தானின் பிரபல ஊடகவியலாளர் ஒருவர் கென்யாவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

அர்ஷாத் ஷெரீப் எனும் தொலைக்காட்சி ஊடகவியலாளர் கென்ய பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார் என கூறப்படுவதாக ஏ.எவ்.பி. தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளரான அர்ஷாத் ஷெரீப், அந்நாட்டு இராணுவத்தை விமர்சித்து வந்தார்.

தேசத்துரோக குற்றச்சாட்டை எதிர்கொள்வதை தவிர்ப்பதற்காக அவர் பாகிஸ்தானிலிருந்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பொலிஸார் நடத்தியதாக கூறப்படும் துப்பாக்கிப் பிரயோகத்தில் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார் என கென்யாவின் பொலிஸாரை மேற்பார்வை செய்யும் சுயாதீன அமைப்பின் தலைவர் ஆன் மெகோரி தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...