‘பாடசாலைகளில் நீர் விநியோகம் துண்டிக்கப்படாது’

Date:

நீர் கட்டணத்தை செலுத்தாத பாடசாலைகளுக்கு நீர் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை எடுத்த தீர்மானத்தை நிறுத்தியுள்ளதாக கல்வி அமைச்சர் டாக்டர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

உரிய நீர் கட்டணங்களை செலுத்தும் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படும் வரை எந்தவொரு பாடசாலையின் நீர் இணைப்பையும் துண்டிக்க வேண்டாம் என கல்வி அமைச்சர் நீர் வழங்கல் சபையிடம் விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்தவிற்கும் நீர் வழங்கல் சபையின் தலைவருக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றுள்ளது.

இதன்படி, நீர் கட்டணம் செலுத்தப்படாத பாடசாலைகளுக்கு நீர் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை நிறுத்துவதற்கு நீர் வழங்கல் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...