‘பாடசாலைகளில் நீர் விநியோகம் துண்டிக்கப்படாது’

Date:

நீர் கட்டணத்தை செலுத்தாத பாடசாலைகளுக்கு நீர் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை எடுத்த தீர்மானத்தை நிறுத்தியுள்ளதாக கல்வி அமைச்சர் டாக்டர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

உரிய நீர் கட்டணங்களை செலுத்தும் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படும் வரை எந்தவொரு பாடசாலையின் நீர் இணைப்பையும் துண்டிக்க வேண்டாம் என கல்வி அமைச்சர் நீர் வழங்கல் சபையிடம் விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்தவிற்கும் நீர் வழங்கல் சபையின் தலைவருக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றுள்ளது.

இதன்படி, நீர் கட்டணம் செலுத்தப்படாத பாடசாலைகளுக்கு நீர் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை நிறுத்துவதற்கு நீர் வழங்கல் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

Popular

More like this
Related

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...