பேருந்து கட்டண திருத்தம் குறித்து போக்குவரத்து ஆணைக்குழுவின் தீர்மானம் இன்று!

Date:

எரிபொருள் விலை திருத்தத்தின் படி பஸ் கட்டணத்தை திருத்த முடியுமா? இல்லை? இது குறித்து இன்று அறிவிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா, தேசிய பஸ் கட்டணக் கொள்கையின் படி, கட்டணங்களை திருத்துவதற்கு எரிபொருளின் விலை 4 சதவீதத்திற்கும் அதிகமாக மாற வேண்டும்.

இதுதொடர்பான கணக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு, பஸ் கட்டணங்கள் திருத்தப்படுமா இல்லையா என்பது இன்று அறிவிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நேற்றிரவு ஏற்பட்ட எரிபொருள் விலை குறைப்புக்கு அமைய பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என தனியார் பஸ் சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

பஸ் கட்டணத்தை திருத்தும் வகையில் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட வேண்டுமென தனியார் பஸ் சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பெற்றோல் விலை குறைப்புடன் ஒப்பிடுகையில் வாடகை முச்சக்கரவண்டி கட்டணங்கள் குறைக்கப்படுமா என்பது குறித்து இன்று அறிவிக்கப்படும் என நிபுணத்துவ முச்சக்கரவண்டி சங்கத்தின் செயலாளர் நிஷாந்த குமார தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...