‘பொடி மைனா’ என்று அழைப்பதில் தனக்கு மகிழ்ச்சி: நாமல்

Date:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொண்டு வந்த இணைய வசதியை பயன்படுத்தி தன்னை ‘பொடி மைனா’ என அழைப்பதில் மகிழ்ச்சி அடைவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இணையத்தில் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை ‘நாக்கி மைனா’ என்றும் அவரை ‘பொடி மைனா’ என்றும் விமர்சிக்கின்றனர்.

மேலும் மக்கள் மஹிந்த ராஜபக்சவின் மகனாக ஏற்றுக்கொண்டதால் தான் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறினார்.

2005 இல் 5வீத மக்களுக்கு மட்டுமே இணைய வசதி இருந்தது. மகிந்த ராஜபக்ச அறிமுகப்படுத்திய இணையத்தை பயன்படுத்தி  இன்று மக்கள் அவரை ‘நாக்கி மைனா’ என்று அழைக்க பயன்படுத்துகின்றனர்.

மேலும் ரணில் விக்கிரமசிங்க முன்பு போல் இப்போது மேற்குலகிற்கு விசுவாசமாக இல்லை. அவர் தூதரகங்களின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படவில்லை.

அதேநேரம் இனி மனித உரிமைகள் பற்றி பேசவில்லை. கோட்டாபய ராஜபக்ச மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தார் ஆனால் ரணில் விக்கிரமசிங்க மக்கள் ஒன்று திரண்டிருந்மத காலி முகத்திடலை துடைத்தெறிந்தார் எனவும் நாமல் குற்றம்சாட்டியிருந்தார்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...