மத வழிபாட்டுத் தலங்களுக்கு மின் கட்டண சலுகை!

Date:

நாட்டில் உள்ள மத வழிபாட்டுத் தலங்களுக்கு மின்சாரக் கட்டணத்தில் நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.

(ஒக்டோபர் 8) அஸ்கிரியப் பிரிவின் தலைவர் வரகாகொட ஞானரதன தேரரை நேரில் சந்தித்து மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் அறிவித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க,

மாதாந்தம் 180 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்படும் மத வழிபாட்டுத் தலங்கள் பொதுநோக்கப் பிரிவின் கீழ் கொண்டுவரப்படும் என  தெரிவித்துள்ளார்.

2022 ஆகஸ்ட் 10ஆம் திகதி முதல் மத வழிபாட்டுத் தலங்களுக்கு மின்சாரக் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.32  ஆக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

ஆகஸ்டில் சமீபத்திய மின் கட்டண திருத்தத்தைத் தொடர்ந்து, ரூ. மாதத்திற்கு 180 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் மத ஸ்தலங்களுக்கு யூனிட்டுக்கு 65/- விதிக்கப்பட்டது.

இந்த மாற்றம் 180 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் மத ஸ்தலங்களின் மின்சார கட்டணத்தை பாதிக்கும் மேலாக குறைக்கும் என ஜானக ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

மேலும், அதிகரிக்கப்பட்ட கட்டணத்தில் 50% குறைக்கும் முறைமை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை மின்சார சபையிடம் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...