அனைத்து தமிழ் கட்சிகளையும் கொழும்புக்கு வருமாறு, சம்பந்தன் திடீர் அழைப்பு!

Date:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் இன்று (25) கொழும்புக்கு அழைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதிகாரப் பகிர்வு தொடர்பான பொதுவான கருத்துக்கு வருவதற்கு விவாதம் செய்யப்போவதாக  தமிழ் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த கலந்துரையாடலை இன்று பிற்பகல் சம்பந்தனின் வீட்டில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த கலந்துரையாடலுக்கு அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதிகாரப் பகிர்வு தொடர்பில் விவாதிக்கத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

வரவு செலவுத் திட்ட விவாதத்தின் பின்னர், அடுத்த மாதம் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...