ஆசிரியர்கள் புடவையையே அணிய வேண்டும் – அமைச்சர் சுசில்

Date:

கொவிட் தொற்று பரவியுள்ள காலப்பகுதியில் வசதியான ஆடைகளை அணிந்து பணிக்கு சமூகமளிக்குமாறு அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுற்றறிக்கை ஆசிரியர்களுக்கு பொருந்தாது என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த் நேற்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்ததுடன் அதனை திருத்துமாறு அரச நிர்வாக செயலாளருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்  ஜயந்த சமரவீர நேற்று முன்தினம் (21) கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்,  பல பகுதிகளில் உள்ள பெண் ஆசிரியைகள் புடவை மற்றும் ஒசரிக்கு பதிலாக வேறு ஆடைகளை அணிந்து பாடசாலைகளுக்கு வந்திருந்தனர்.

இதேவேளை, நேற்றுமுன்தினம் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பல பிரதேசங்களில் உள்ள ஆசிரியர்கள் வசதியான உடையில் பாடசாலைக்கு வந்திருந்தமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இவ்வாறு சாதாரண உடையில் பாடசாலைக்கு வந்த ஆசிரியர்கள் தொடர்பில் கல்வி அமைச்சர் தலையிட்டு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதில் அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாடசாலை ஆசிரியைகள் சிலர், புடவைக்கு பதிலாக வேறு ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு வந்த சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆசிரியர் பாடசாலை  பணியின் கண்ணியத்தை பாதுகாக்கும் வகையில், பாடசாலைக்கு வருகை தரும் போது, ஆசிரியர்கள் பாரம்பரியமாக பின்பற்றும் நடைமுறைகளை குறித்த ஆசிரியைகள் ஏன் கடைப்பிடிக்க தவறினார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

புதிய திட்டங்களுடன் மக்கள் பணியை அர்ப்பணிப்புடன் முன்னெடுப்போம்- ஜனாதிபதி செயலாளர்

புதிய கருத்துக்கள் மற்றும் திட்டங்களுடன் ஜனாதிபதியின் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை...

முன்னாள் எம்.பி. சந்தன கத்ரியாராச்சி கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி கொழும்பு குற்றப் பிரிவினரால் (CCD)...

துருக்கியில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்

துருக்கிக்கான இலங்கைத் தூதரகத்தின் அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஒன்றிணைந்து, சிங்கள...

மாற்றியமைக்கப்பட்ட வாகனப் பதிவு எண்களை பயன்படுத்துவோருக்கு கடும் எச்சரிக்கை!

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வழங்கப்படும் வழக்கமான வாகனப் பதிவு இலக்கங்களுக்குப் பதிலாக,...