ஆப்கானிஸ்தானில் மக்கள் முன்னிலையில் 19 பேருக்கு கசையடி தண்டனை!

Date:

ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு மாகாணத்தில் கள்ளத்தொடர்பு, திருட்டு மற்றும் வீட்டை விட்டு ஓடுதல் போன்ற குற்றத்திற்காக 19 பேருக்கு கசையடி தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை உச்ச நீதிமன்ற அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.

தக்கார் மாகாணம் தலோகன் நகரில் தண்டனை விதிக்கப்பட்ட 10 ஆண்கள் மற்றும் 9 பெண்களுக்கு 39 முறை கசையடி வழங்கப்பட்டதாகவும், இந்த தண்டனை கடந்த 11ம் திகதி வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு நகரின் பிரதான மசூதியில் பெரியவர்கள், அறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் நீதிமன்ற அதிகாரி கூறியுள்ளார்.

தலிபான்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்சியை கைப்பற்றிய பிறகு கசையடி மற்றும் பிரம்படி தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன என்பதற்கான முதல் அதிகாரப்பூர்வ தகவல் இது என கூறப்படுகிறது.

இதற்கு முன்பு, 1990களின் பிற்பகுதியில் தலிபான்களின் முன்னைய ஆட்சியின்போது, தலிபான் நீதிமன்றங்களில் குற்றங்களுக்கு தண்டனை பெற்றவர்களுக்கு பொது இடங்களில் மரண தண்டனை, கசையடி மற்றும் கல்லெறிதல் ஆகியவற்றை மேற்கொண்டது.

அனைத்து ஷரியா சட்டங்களையும் அமல்படுத்த உறுதிபூண்டுள்ளதாக சமீபத்தில் தலிபான் செய்தித் தொடர்பாளர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...