இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 10 பேர் வைத்தியசாலையில்!

Date:

அதிவேகமாக ஓடிய இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு பேருந்துகளிலும் பயணித்த 10 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (நவம்பர் 2) காலை 7.30 மணியளவில்  நாவலப்பிட்டி மிப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸும் கண்டியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் தனியார் பஸ் ஒன்றின் சாரதியும் அடங்குகிறார்.

குறித்த வீதியில் அடிக்கடி விபத்துக்கள் இடம்பெறும் வளைவு ஒன்றிற்கு அருகாமையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், இரண்டு பேரூந்துகளும் அதிவேகமாக பயணித்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பஸ்களில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களும் இருந்ததாக நாவலப்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...