எரிசக்தி திட்டங்களில் முதலீடு செய்ய தமது அரசாங்கம் ஆர்வமாகவுள்ளது: அரபு இராச்சியத்தின் தூதுவர்

Date:

இலங்கை பிரதமர் தினஷ் குணவர்த்தனவுக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் காலித் நாசர் அல் அமெரிக்கும் பிரதமர் அலுவலகத்தில் இன்று   கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது இலங்கையின் எரிசக்தித் துறையில் முதலீடு செய்வதற்கு பெரும் வாய்ப்புகள் இருப்பதாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் காலித் நாசர் அல் அமெரி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் முதலீடு செய்வதில் தமது அரசாங்கம் ஆர்வமாக உள்ளதாக அரபு இராச்சியத்தின் தூதுவர் குறிப்பிட்டார்.

எரிசக்தி துறைக்கு மேலதிகமாக விவசாயம் மற்றும் கைத்தொழில் துறைகள் போன்ற துறைகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் பிரதமர் வலியுறுத்தினார்.

அத்துடன், தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்து விரைவாக மீள்வதற்கு உதவிய ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு அரசாங்கம் சார்பாக பிரதமர் நன்றி தெரிவித்தார்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...