ஓமானில் ஆள் கடத்தல் மோசடி குறித்து மனுஷவின் விளக்கம்!

Date:

ஆள் கடத்தல் மோசடியில் ஈடுபட்ட ஓமானில் உள்ள இலங்கை தூதரக அதிகாரி ஒருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டு மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார  தெரிவித்தார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த அதிகாரி இலங்கை வந்தவுடன் கைது செய்யப்படுவார் என்றும் அமைச்சர் கூறினார்.

“இந்த விடயத்தை மேலும் விசாரிக்க சில அமைச்சக அதிகாரிகளை காவல்துறையினருடன் நாங்கள் அனுப்பியுள்ளோம்,” என்று அவர் கூறினார்.

ஓமான் மற்றும் டுபாயில் உள்ள பாதுகாப்பு மையங்களில் தங்களுடைய வேலைவாய்ப்பு முகவர்களால் ஏமாற்றப்பட்ட 140க்கும் மேற்பட்ட இலங்கையர்களும் விரைவில் கவனிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் உறுதியளித்தார்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதியின் அலுவலகத்தினால் நியமிக்கப்பட்ட குழுவினால் ஆள் கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்பின் வெளியான ஊடக அறிக்கைகளும் இந்த ஊழலை வெளிக்கொணர உதவின. இந்த கடத்தலுக்கு பின்னணியில் இருந்த ஒரு பெண் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்,

இலங்கை வீட்டுப் பணியாளர்களை  அனுப்புவதை இடைநிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...