ஓமானுக்கான இலங்கை தூதரகத்தில் கடமையாற்றும் அதிகாரியை நாட்டிற்கு அழைக்க தீர்மானம்!

Date:

ஓமானுக்கான இலங்கை தூதரகத்தில் கடமையாற்றும் தொழிலுறவு பிரிவின் அதிகாரியை உடனடியாக நாட்டிற்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சினால் குறித்த விடயம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலுக்காக ஓமானுக்கு சென்ற பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்தார் என மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாட்டை தொடர்ந்தே அவர் நாட்டிற்கு அழைக்கப்படவுள்ளார்.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் முதல் கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சில விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...