கஞ்சா பயிரிடும் திகதியை அமைச்சர் கூறுகிறார்!

Date:

கஞ்சா பயிரிடும் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என ஆயுர்வேத இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்தார்.

கஞ்சா பயிரிடுவது தொடர்பில் சில பிக்குகள் தவறான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகத் தெரிகின்றது எனத் தெரிவித்த அமைச்சர், கஞ்சா என்பது ஒரு மருந்தாகும்.  மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

கஞ்சா செய்கை மூலம் 52 நாடுகள் பில்லியன் கணக்கான டொலர்களை வருமானமாக ஈட்டுகின்றனர்.

இதேவேளை நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதாக கூறி எம்பிலிப்பிட்டியவில் 10,000 ஏக்கர் கஞ்சா பயிரிடுவதற்கு எம்பிலிப்பிட்டி மகா சங்கமும் பௌத்த பிக்குகளும் அனுமதிக்க மாட்டார்கள் என இராமஞான மகா நிகாயத்தின் பிரதம சங்கநாயகம் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...