கஞ்சா பயிரிடும் திகதியை அமைச்சர் கூறுகிறார்!

Date:

கஞ்சா பயிரிடும் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என ஆயுர்வேத இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்தார்.

கஞ்சா பயிரிடுவது தொடர்பில் சில பிக்குகள் தவறான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகத் தெரிகின்றது எனத் தெரிவித்த அமைச்சர், கஞ்சா என்பது ஒரு மருந்தாகும்.  மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

கஞ்சா செய்கை மூலம் 52 நாடுகள் பில்லியன் கணக்கான டொலர்களை வருமானமாக ஈட்டுகின்றனர்.

இதேவேளை நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதாக கூறி எம்பிலிப்பிட்டியவில் 10,000 ஏக்கர் கஞ்சா பயிரிடுவதற்கு எம்பிலிப்பிட்டி மகா சங்கமும் பௌத்த பிக்குகளும் அனுமதிக்க மாட்டார்கள் என இராமஞான மகா நிகாயத்தின் பிரதம சங்கநாயகம் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

புனித ரமழான் நோன்பு நாளை முதல் இலங்கையில் ஆரம்பம்: கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு!

இலங்கையில் புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை இன்று (பெப்ரவரி 18, புதன்கிழமை)...

நாட்டின் பெரும்பாலன பகுதிகளில் 100 மி.மீ வரை மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது!

இலங்கைக்கு தென்கிழக்காக தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு மேலாக உருவாகியுள்ள குறைந்த...

கண்டி அனர்த்தப் பகுதிகளைப் பார்வையிட்டார் IMF பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா: அரசாங்கத்தின் துரித நடவடிக்கைக்குப் பாராட்டு!

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தலைமையிலான தூதுக்குழுவினர்,...

ட்ரம்ப்பின் ‘அமைதிக் குழுவில்’ இணைய மெக்சிகோ மறுப்பு: பார்வையாளராக மட்டும் பங்கேற்க முடிவு!

காசா போர் நிறுத்தத்தை மேற்பார்வையிடுவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உருவாக்கியுள்ள...