களுத்துறையில் பொலிஸாரின் நடத்தை தொடர்பில் ஐ.நா உட்பட பலரும் கண்டனம்

Date:

நேற்று (12) களுத்துறையில் பதாதைகளை ஏந்தியவாறு வீதியில் சென்ற இரு பெண்களை தடுத்து நிறுத்திய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு பல முக்கியஸ்தர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட பதட்டமான சூழ்நிலையைத் தொடர்ந்து, ஒரு மூத்த பொலிஸ் அதிகாரி பெண் போராட்டக்காரர்கள் மற்றும் பெண் பொலிஸ் அதிகாரிகளைக் கையாளும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது.

இந்நிலையில் இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம்டி இன்று ஒரு ட்வீட் மூலம் பெண்கள் நடத்தப்படுவதைக் கண்டித்துள்ளார்.

“பொது வாழ்வில் இருக்கும் பெண்கள் பெரும்பாலும் பாரபட்சம் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்களுக்கு ஆளாகின்றனர், அவர்கள் கடமையின் 2வது வரிசையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும்போது அவர்கள் மரியாதை காட்டப்பட வேண்டும், அவர்களின் முயற்சிகள் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் சட்டத்தரணி சாலிய பீரிஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...