கொழும்பு துறைமுகத்திற்கு ‘Schiff 5’ என்ற அதிசொகுசு கப்பல்!

Date:

சுமார் 2,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட குழுவை ஏற்றிச் செல்லும் ‘Schiff 5’ என்ற அதி சொகுசு கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த கப்பல் உலகின் மிக ஆடம்பரமான கப்பல்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

கப்பலின் பணியாளர்களின் எண்ணிக்கை 945 என்றும், 2534 பயணிகளுக்கான வசதிகளை இது வழங்குகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கப்பலில் இருந்து நாளை இலங்கைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை 2030 ஆகும்.

இது தொடர்பில் டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ள சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளுடன் வரும் இந்தக் கப்பலின் அளவு காரணமாக கொழும்பு துறைமுக பயணிகள் முனையத்தில் நிறுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

 

Popular

More like this
Related

DPL-2026 Season 5 சாம்பியனாக தெல்தோட்டை டிராகன்ஸ் அணி தெரிவு

ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு தெல்தோட்டை, வாலிபர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட...

போலி விமான டிக்கெட்டுகள் தள்ளுபடிகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

விமான டிக்கெட்டுகளுக்கு மலிவான அல்லது சிறப்புத் தள்ளுபடிகளை வழங்குவதாகக் கூறி, சமூக...

இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில். அமெரிக்க டொலர்கள்

இலங்கை நெருக்கடி நிலையிலிருந்து மீண்டு, மிகவும் நெகிழ்ச்சியான பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து...

எரிபொருள் QR குறியீடு தொடர்பில் 1000 முறைப்பாடுகள்!

தவறான முறையில் அல்லது பிறருடைய QR குறியீடுகளைப் பயன்படுத்தி எரிபொருள் பெற்றமை...