ஜி-20 மாநாட்டில் இலங்கை பொருளாதார நிலை குறித்து கவனம்!

Date:

ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் அரச தலைவர்களின் கவனம் இலங்கையின் பொருளாதார நிலைமையை மீட்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனா மற்றும் ஜப்பான் உட்பட பல கடன் வழங்குநர்களிடமிருந்து இலங்கைக்கு அவசரமாக நிதிப் பாதுகாப்பு தேவை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை ஊழியர்கள் மட்ட உடன்படிக்கையை எட்டியுள்ளதால் இந்த பாதுகாப்பு அவசரமாக தேவைப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜி-20  மாநாட்டில் பங்கேற்கும் உலகின் முக்கிய நாடுகளின் தலைவர்கள் நடுத்தர வருமான நாடுகள் எதிர்நோக்கும் கடனை மீளச் செலுத்துவதில் உள்ள பிரச்சினை குறித்து நேற்று (15) கவனம் செலுத்தியுள்ளனர்.

இதன்படி, இலங்கை உட்பட பல்வேறு நாடுகளின் கடன் மறுசீரமைப்பு கோரிக்கைகளுக்கு பல கடன் வழங்கும் நாடுகள் நல்ல பதிலை வழங்க வேண்டும் என ஜி-20 நாடுகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகின் முக்கிய பொருளாதாரம் என்று கூறும் நாடுகளின் தலைவர்கள் தலைமையில் ஜி 20 மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரில் இந்த ஆண்டு நடைபெறுகின்றது.

Popular

More like this
Related

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...