புத்தளம் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ‘விஷேட ஒன்று கூடல்’!

Date:

புத்தளம் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ‘விஷேட ஒன்று கூடல்’ நிகழ்வொன்று (26) புத்தளம் தில்லையடியில் அமைந்துள்ள அதன் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வு புத்தளம் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் கருத்திட்ட அதிகாரி ஆர்.சுகுனா மற்றும் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நிகழ்ச்சி திட்ட அதிகாரி இந்துமதி ஹரிஹரதமோதரன் ஆகியோரின் வழிகாட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாதுகாப்பு தரப்பினர், கல்வியலாளர்கள் உள்ளிட்ட துறைசார்ந்த பல்வேறு அமைப்புக்களை சார்ந்த சமூகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் மேற்கொள்ள வேண்டிய எதிர்கால திட்டங்கள் தொடர்பாக இங்கு விரிவாக ஆராயப்பட்டன.

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார சிக்கலில் பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கும் காலை போஷாக்கின்மையினை போக்குவதற்கு விழுது மேம்பாட்டு மையம் முன்வரவேண்டும் என இங்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாகவும் இங்கு விரிவாக ஆராயப்பட்டன.

எதிர்வரும் ஜனவரி மாதம் புத்தளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அரசாங்க அதிகாரிகள் மத்தியில் போதைப்பொருள் பாவனை தடுப்பு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயலமர்வுகளை விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தினால் நடாத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

தகவல்: எம்.யூ.எம்.சனூன்

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...